Dinamalar Ambitious Teacher 2014
சமூக அக்கறை கொண்ட எம் பள்ளி மாணவர்கள்:-
இளம் பிஞ்சுகள் சிலர் தவறு என்று அறியாமல் தாய், தந்தையர் இருவரும் சுவைத்த எஞ்சியுள்ள பான்பராக் ,மது, பீடி ,சிகரெட் ,புகையிலை போன்ற போதை பொருட்களை ருசித்து பள்ளியில் மல்லாடுவதையும் பெற்றோர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு வர மற்றவர்கள் கேலி யால் பிஞ்சு மனது படும் வேதனையையும் கண்டு நானும் 5 மாணவர்களும் சேர்ந்து செய்த மாற்றம் என்பது சாத்தியமே Say No To Drinks செயல்திட்டம் 8 பேரை குடியை விட தூண்டியது. மேலும் மாணவர்கள் போதை பாதையின் கொடுமையை சமுதாயத்திற்கு பறைசாற்றி, பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற அமைதி வழியில் போராட்டத்தை துவங்கியுள்ளனர் .
பணத்திற்காக கொலை, கொள்ளை, திருட்டு என்று வாழ்ந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆசிரியரது பர்ஸிலேயே ஆட்டையைப் போட்டனர். பள்ளியில் இருந்த பீரோ பூட்டை உடைத்தனர். விடுமுறை நாட்களில் பூட்டிய வகுப்பறையை திறந்து மலம் கழித்து அசிங்கம் செய்வதும் வளாகத்தை பாழ்படுத்துவதுமாக இருந்தவர்கள் இன்று பள்ளி என்ற சமுதாயத்தை பாதுகாத்து வருகின்றனர்.
We are ready to read English ,Speedy Speakers in English போன்ற செயலாராய்ச்சிகளை மேற்கொண்டு ஆங்கில மொழிப் புலமையை வளர்த்ததனால் பணத்தையே குறிக்கோளாக்கி வேலை வேலை பெற்றோர்கள் பள்ளியின் முன்னேற்றத்திற்காக மாதா மாதம் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழுவில் தவறாது பங்கேற்கின்றனர்.
நாட்டுப் பற்றுடன் விளங்கும் நாளைய தலைவர்கள்:-
பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்கத்தில் 6 முதல் 8 வகுப்பில் பயிலும் அனைவரும் பங்கேற்று 'அனைவரும் சகோதரர்கள்' என்ற மனப்பான்மை மேலோங்க செய்தனர். பொருளாதார நிலை உயர, வெம்மை உடைகள், தரைவிரிப்புகள், வாழ்த்து அட்டைகள், மாலைகள் என தேவையற்ற பொருட்களை கொண்டு செய்யும் கைத்தொழிலை கற்று அதன்மூலம் ஈட்டும் பணத்தினை அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வழங்கி மகிழ்கின்றனர்.
பள்ளியில் புதர்காடாக இருந்த இடத்தை பண்படுத்தி அழகானதொரு காய்கறி தோட்டம் அமைத்து கீரை காய்கறிகளை இயற்கை உரங்கள் இட்டு, மரங்களையும் வளர்த்து சுற்றுச்சூழலை பேணிக்காத்து வருகின்றனர்.
பள்ளிக்கு மருத்துவர்களையும் சாலை போக்குவரத்து காவலர்களையும் அழைத்து விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி நாட்டு மக்களுக்கு சேவை புரிகின்றனர்.
மருத்துவமனைகளுக்கும் அருகாமை பள்ளிகளுக்கும் Junior Red Cross படையினர் பார்வையிட செல்வதால் சுயமதிப்பீடும் செய்ய அறிந்துள்ளனர்.
பாட இணைச் செயல்பாடுகளினால் பள்ளி விழாக்களில் நாட்டுத் தலைவர்கள் அவர்களது தியாகங்களை எடுத்தியம்புகின்றனர். மேலும் வாராவாரம் குழு பாடல், நாடகங்கள், நடனம், பூக்களின் அலங்காரம், அறிவிப்பு பலகை ஒப்பனை போட்டி, வினாடி வினா ,மாறுவேடப்போட்டி ,சுவரொட்டிகள் தயாரித்தல், கதை கூறும் போட்டி, பேச்சுப்போட்டி ,எழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி ,கவிதை போட்டி ,பொன்மொழிகள் ,பாட்டுக்குப்பாட்டு காகித வேலைப்பாடு, படம் வரைதல், கோலப்போட்டி ஆகியவற்றால் திறமையை வெளிக் கொணர்ந்து ஆளுமைப் பண்பை பெற்றுத் திகழ்கின்றனர்.
முடிவுரை:-எதிர்காலத்தில் மாணவர்களை பண்புள்ள வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுள்ள பட்டதாரிகளாக உருவாக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம். இலட்சிய பாதை தொடரும் ...
இங்ஙனம் திருமதி. புஷ்பா,
பட்டதாரி ஆசிரியை ,
ஆங்கிலம்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
பெட்டட்டி,
குன்னூர்,
நீலகிரி.
நாள் :18.09.2014
Comments
Post a Comment